ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் வருகிற மே 30 ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.



கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியில் உணவகங்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் உடனடியாக ஹோட்டல் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்க வலியுறுத்தி வருகிற மே 30 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பேக்கரி மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட உள்ளன. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஒன்றரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவளிக்க உள்ளன. மேலும், இப்போராட்டத்தின் காரணமாக 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட உள்ளது என கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...