கோவை, காந்திபுரத்திற்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை வடக்கு மண்டலம் எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார் கூறுகையில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஒபிஎஸ் தலைமையில் சிறப்பாக இருந்தது. தற்போதைய ஆட்சி பற்றி உங்களுக்கே தெரியும். அடுத்த மாதம் 25-ம் தேதி கோவையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.
இதனைத்தொடர்ந்து, ஓ.பண்ணீர் செல்வம் உடல்நலம் குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு சிறப்பாகவும், நலமாகவும் ஓபிஎஸ் உள்ளார் என பிஆர்ஜி அருண்குமார் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை வடக்கு மண்டலம் எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார் கூறுகையில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஒபிஎஸ் தலைமையில் சிறப்பாக இருந்தது. தற்போதைய ஆட்சி பற்றி உங்களுக்கே தெரியும். அடுத்த மாதம் 25-ம் தேதி கோவையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.
இதனைத்தொடர்ந்து, ஓ.பண்ணீர் செல்வம் உடல்நலம் குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு சிறப்பாகவும், நலமாகவும் ஓபிஎஸ் உள்ளார் என பிஆர்ஜி அருண்குமார் பதிலளித்தார்.