வாகன எப்.சி காலதாமத அபராதத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோக்கலுக்கு எப்.சி செய்ய காலதாமதம் செய்தால் கூடுதலாக அதிகளவு அபராதம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் முறையான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். ஜி.பி.எஸ் கருவியை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினர் கோவை மாவட்ட தெற்கு வட்டார போக்குவரத்துக் கழக அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்கள் கோரிக்கைகளை மனுவாக வட்டார போக்குவரத்து துணை அலுவலரிடம் வழங்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.