நீலகிரியில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 322 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் பள்ளி வாகனங்களின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது உதகையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அவசர கால கதவுகள், படிகட்டுகள், இருக்கைகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளனவா என்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சே.லட்சுமிபதி ராஜ், உதகை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...