நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 322 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் பள்ளி வாகனங்களின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது உதகையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அவசர கால கதவுகள், படிகட்டுகள், இருக்கைகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளனவா என்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சே.லட்சுமிபதி ராஜ், உதகை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 322 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் பள்ளி வாகனங்களின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது உதகையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அவசர கால கதவுகள், படிகட்டுகள், இருக்கைகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளனவா என்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சே.லட்சுமிபதி ராஜ், உதகை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.