டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் உண்ணாவிரதம்

டாஸ்மாக் ஊரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் , டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்கக் கோரியும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களால்  சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



மேலும், இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மற்ற அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...