டாஸ்மாக் ஊரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் , டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்கக் கோரியும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களால் சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மற்ற அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களால் சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மற்ற அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.