குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்- மெத்தனம் காட்டும் மாநகராட்சி ஊழியர்கள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக குறிப்பாக கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவிப்பு விடுத்து வருகிறது. ஆனால், மாநகராட்சியின் தண்ணீர் விநியோகக் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



கோவை மாநகராட்சி, காந்திபுரம் வார்டு எண் 52-க்கு உட்பட்ட நூறடி சாலை எண்- 1 வீதி தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யும் பாதாள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஒடி வருகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரு வேளையில் சப்பை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த வார்டுக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தும் இன்று வரை இப்பிரச்சனையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

தண்ணீரை வீணடிக்க வேண்டாம் என்று அறிவிப்பு விட்டு, தண்ணீரை வீணடிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...