எஜுதர்மா அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு, புதிய ஆராய்சியாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு உதவி வருகிறது.

இதில், உலகம் முழுவதும் 700 கொடையாளர்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு உதவி வருகின்றனர். இதில், தமிழகத்தில் 150 பேர் எஜுதர்மா மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இன்று, மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வரும் கொடையாளர்களும், மாணவ பயனாளர்களும் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. இநிகழ்ச்சியில் 30 நிதி உதவியாளர்கள், 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் எஜுதர்மா மூலம் வழங்கப்படும் உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் சோர்வடையாமல் தங்களது இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, கேஜிஐஎஸ்எல் இயக்குநர் ஆர்.ரவிச்சந்தின், தற்போது எஜுதர்மா மூலம் பயனடைந்து வரும் மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் பிற மாணவர்களுக்கு, கல்வி மேற்கொள்ள சிரமப்படுவோருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி, ரேடியோ மிர்ச்சி புகழ் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், உலகம் முழுவதும் 700 கொடையாளர்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு உதவி வருகின்றனர். இதில், தமிழகத்தில் 150 பேர் எஜுதர்மா மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இன்று, மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வரும் கொடையாளர்களும், மாணவ பயனாளர்களும் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. இநிகழ்ச்சியில் 30 நிதி உதவியாளர்கள், 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் எஜுதர்மா மூலம் வழங்கப்படும் உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் சோர்வடையாமல் தங்களது இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, கேஜிஐஎஸ்எல் இயக்குநர் ஆர்.ரவிச்சந்தின், தற்போது எஜுதர்மா மூலம் பயனடைந்து வரும் மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் பிற மாணவர்களுக்கு, கல்வி மேற்கொள்ள சிரமப்படுவோருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி, ரேடியோ மிர்ச்சி புகழ் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.