அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று துவக்கம்


52வது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 16 வது ஆண்டு பெண்கள் பங்கேற்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது.

அகில இந்திய அளவில் முன்னணி அணிகள் பங்கேற்கும் 52வது ஆண்டு ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை,மற்றும் 16ம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கி  வரும் 31ம் தேதி வரை கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. ஆண்கள் ஏ பிரிவில் வருமான வரித்துறை அணி, இந்திய விமான படை, குஜராத் விளையாட்டு கழக அணி, மத்திய ரிசர்வ் போலீஸ் அணியும் பி பிரிவில் ஐ.ஓ.பி, இந்திய ரயில்வே, இந்திய கப்பற்படை மற்றும் கோவை மாவட்ட கூடைபந்தாட்ட கழகம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.



பெண்கள் ஏ பிரிவில் தென் மத்திய ரயில்வே, தென்னக ரயில்வே,கிழக்கு ரயில்வே அணியும் பி பிரிவில் கேரள மின்வாரிய அணி,சட்டீஸ்கர், கூடைபந்து கழக அணி, மற்றும் கோவை மாவட்ட கூடை பந்தாட்ட கழக அணிகளும் பங்கேற்கிறன. லீக் சுற்று முறையில் நடைபெறும் இப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் அரை இறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும். நேற்று நடைபெறும் போட்டிகளில் பெண்கள் பிரிவில் 3 போட்டிகளும் ஆண்கள் பிரிவில் 2 போட்டிகளும் நடைபெற்றது.

முதலாவது ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய கப்பற்படை அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணி வீர்ர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்ததால் யார் வெற்றி பெறவார்கள் என ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி 94-83 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவின் முதல் ஆட்டத்தில் கூடைபந்து கழக அணியை எதிர்த்து சட்டீஸ்கர் விளையாடியது. இதில் சட்டீஸ்கர் அணி 57-43 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற ஆண்கள் போட்டியில் குஜராத் அணியுடன் சி.ஆர்.பி.எப் அணி விளையாடியது.



இதில் குஜராத் அணி  76-66 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது பெண்கள் பிரிவிற்கான போட்டியில் தெற்கு ரயில்வே அணி கிழக்கு ரயில்வே அணியுடன் மோதியது. இதில் கிழக்கு  ரயில்வே அணி 50-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மின்சார வாரிய அணி 74-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும், அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற தவறிய இரு அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரமும், மேலும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்படுகிறது.சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு  முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற தவறிய இரு அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...