நீலகிரி மாவட்டம், உதகைக்கு கோடை விடுமுறையினை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அன்றாடம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வேலூரைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் உதகைக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை முடித்துவிட்டு கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அவர்கள் திரும்பி சென்றுகொண்டிருந்தனர். அப்போது தட்டபள்ளம் என்னும் பகுதியில் இவர்களது வாகனம் வந்துகொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 20 பேர் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.