ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலுவுக்கு கேரளா ஆளுநர் பி.சதாசிவம் வாழ்த்து

கோவை, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜன் அரங்கில் நேற்று மாலை கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலுவுக்கு  பாராட்டு விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரளா ஆளுநர் பி.சதாசிவம் கலந்து கொண்டு ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலுவுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது நம் நாட்டில் மருத்துவத் துறை நவீன வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே வேளையில், மருத்துவச் செலவு அதிகரிப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைகின்றனர். அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சியுடன், மருத்துவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.



முன்னதாக, விருது பெற்ற டாக்டர் சி.பழனிவேலு தனது ஏற்புரையில், கடந்த 2006-ஆம் ஆண்டு பி.சி.ராய் விருது பெற்றபோது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் என்னிடம், புற்றுநோய் குறித்து நம்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, 2013-ஆம் ஜெம் மருத்துவமனைக்கு அவர் வந்தபோது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் அவருடன் சகஜமாக உரையாடியதைக் கண்டு மகிழ்ந்தார். மருத்துவத் துறை குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல அப்துல் கலாமின் ஆலோசனைகள் முக்கியமானதாக அமைந்தன என்றார்.  



இந்த விழாவில், பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர அடிகளார், பாதிரியார்கள் ஜான் ஜோசப் ஸ்டேனிஸ், கே.சி.ரிச்சர்டு துரை, ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், சி.ஐ.ஐ.தலைவர் எஸ்.நாராயணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமி, வழக்குரைஞர் வி.நந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...