வால்பாறையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோரும் நடைபெரும் கோடை விழா


கோவை மாவட்டத்தின் கோடை வசந்ததலமாக வால்பாறை இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிர மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து இயற்கை சூழலை ரசித்து செல்வார்கள். அரசு சார்பக ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று காலை துவங்கியது.



விழாவை ஒட்டி தோட்டக்கலை துறை சார்பாக 12,000 கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட கங்காரு மற்றும் ஒட்டகமும், 100 கிலோ காய்கறிகளால் செய்யப்பட்ட பறக்கும் குதிரையும், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. வனத்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. டான் டீ, ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை, சுகாதார துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, ஆவின் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார், தோட்டக்கலை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் விஜயகுமார், வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் நகராட்சி பொறியளர் ராஜகோபால் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 



தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் மூலனூர் மின்னல் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் நுன்னரிவு மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அரசு ஆண்கள் மேல் நிலப்பள்ளி, வால்பாறை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வால்பாறை தூய இருதய மேல் நிலைப்பள்ளி, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 



இவ்விழாவானது ஆண்டுதோரும் மே கடைசி வாரத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால் இவ்விழாவானது வருடம் தோரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் கோடைவிழா நடைபெறும் நாட்களை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்தால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இன்று மாலை நிறைவு பெரும் இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...