தமிழகத்தில் மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்திருந்தார். அதனையடுத்து ரமலான் பிறை நேற்று மாலை தென்பட்டதால் இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க தொடக்கியுள்ளனர். மக்ரிப் தொழுகை சூரியன் மறைத்த பிறகு இஸ்லாமியர்கள் தொழுவது வழக்கம். அந்த தொழுகை முடிந்த பிறகு பிறை தென்படுகிறதா என்று காண்பார்கள். அவ்வாறு ரமலான் பிறை தென்பட்டால் அன்று முதல் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. இதையடுத்து பள்ளிவாசல்களில் தராவிஹ் என்னும் சிறப்பு இரவு தொழுகை நடைபெரும். இதில் எராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொள்வார்கள்.

இஸ்லாமியர்களின் ஜம்பெரும் கடைமைகளில் ஒன்று நோன்பு ஆகும். ரமலான் நோன்பு கடைபிடிக்க ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஷாபான் மாதம் கடைசி நாள் மாலை வானத்தில் பிறை பார்ப்பர்கள். பிறை தெரிந்ததும் அன்று இரவு தொடங்கி 30 நாட்களும் ரமலான் முதல் நாள் அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை பசித்திருந்து ஒவ்வொரு நாளும் விரதம் என்னும் நோன்பு இருப்பார்கள்.
இந்த நோன்பு கடைபிடித்தல் 30 நாட்கள் நடைபெறும். 30 ஆம் நாள் இஸ்லாமிய மாதம் ஷவ்வால் பிறை 1 அன்று ரமலான் பண்டிகை கூட்டுத் தொழுகையுடன் கொண்டாடுவார்கள். இதன்படி இந்த ஆண்டு ரமலான் பிறை தெரிகின்றதா என்று ஏராளமான இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் எதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததை அடுத்து இன்று மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் நேற்று இரவு தராவிஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொண்டனர். காலை சூரியன் உதயம் ஆகும் முன்பு உணவு அருந்திவிட்டு இன்று மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சியுடன் சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நோன்பு திறப்பார்கள். இதோ போல வருகின்ற 30 நாட்களும் நடைபெறும்.

இஸ்லாமியர்களின் ஜம்பெரும் கடைமைகளில் ஒன்று நோன்பு ஆகும். ரமலான் நோன்பு கடைபிடிக்க ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஷாபான் மாதம் கடைசி நாள் மாலை வானத்தில் பிறை பார்ப்பர்கள். பிறை தெரிந்ததும் அன்று இரவு தொடங்கி 30 நாட்களும் ரமலான் முதல் நாள் அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை பசித்திருந்து ஒவ்வொரு நாளும் விரதம் என்னும் நோன்பு இருப்பார்கள்.
இந்த நோன்பு கடைபிடித்தல் 30 நாட்கள் நடைபெறும். 30 ஆம் நாள் இஸ்லாமிய மாதம் ஷவ்வால் பிறை 1 அன்று ரமலான் பண்டிகை கூட்டுத் தொழுகையுடன் கொண்டாடுவார்கள். இதன்படி இந்த ஆண்டு ரமலான் பிறை தெரிகின்றதா என்று ஏராளமான இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் எதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததை அடுத்து இன்று மே 28ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் நேற்று இரவு தராவிஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்களின் கலந்து கொண்டனர். காலை சூரியன் உதயம் ஆகும் முன்பு உணவு அருந்திவிட்டு இன்று மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சியுடன் சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நோன்பு திறப்பார்கள். இதோ போல வருகின்ற 30 நாட்களும் நடைபெறும்.