டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் வடபுதூர் மற்றும் பொட்டையாபண்டிபுரம்பு ஆகிய கிராமத்து பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் கிராமம், கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் மற்றும் சங்கராயபுரம், முத்துக்கவுண்டனூர் செல்லும் சாலை வழி சந்திப்பில் கல்லுக்குழி பேருந்து நிறுத்தம் அருகே ரத்தினசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 322 என்னும் எண் கொண்ட மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இப்பகுதி, விவசாய நிலம் மற்றம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த டாஸ்மாக் கடையினை கடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள், அருகில் உள்ள விவசாயிகள் செல்ல வேண்டும். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு மதுகுடிக்க வருவோரால் இடையூறுகள் ஏற்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...