மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றம்

கோவை மாவட்டம், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு திங்கட்கிழமை (இன்று) காலை 11 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் இச்சேவையை துவக்கி வைத்தார்.

நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தேசிய தகவல் மைய தகவல் அலுவலர் ரவிக்குமார், உதவி தகவல் அலுவலர் வெங்கடேஷ், பராமரிப்பு ஆய்வாளர்கள் தவமணி, அயூப்ஜான், கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் (பொறுப்பு) முத்துராஜா, கண்காணிப்பாளர் மோகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ், வட்டத்துணை ஆய்வாளர் சிவகுருநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் இதர உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...