நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துரை ஆதிவாசி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியினர் 50-க்கும மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் மனு அளித்தனர்.
மேலும், இப்பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் மதுப்பான கடையால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றார். இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி இப்பகுதியில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக பாடந்துரை பகுதீயில் டாம்க் கடை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மண்ணரசன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.
மேலும், இப்பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் மதுப்பான கடையால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றார். இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி இப்பகுதியில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக பாடந்துரை பகுதீயில் டாம்க் கடை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மண்ணரசன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.