ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது தற்காலிகமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும்.

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017 ஆம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 15ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்ய எலக்ட்ரீசியன், எம்எம்வி, பொருத்துனர், மின்சார கம்பி செலுத்துபவர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக 2017 மே 31 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசால் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு கட்டணங்கள் முற்றிலும் இலவசம். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மேலும், பயிற்சி பெரும் அனைவருக்கும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

இதற்கான கல்வித் தகுதி தொழிற் பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை). அனைத்து பயிற்சியாளர்களுக்கும் என்ஐஎம்ஐ புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9942730555, 8940837678, 9894783226 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...