தமிழக அரசின் சார்பில் வால்பாறை கோடை விழாவின் ஒருபகுதியாக கிராமப்புற ஓவியங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் விக்னேஷ் ராஜ், முருகேசன், வீரகுமார் உள்ளிட்ட 14 பேர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. இதனை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
முன்னதாக, வால்பாறை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓவிய அறக்கட்டளை செயலாளர் விக்னேஷ் ராஜ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யை கவுரவித்து உரையாற்றினார்.

இக்கண்காட்சியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் விக்னேஷ் ராஜ், முருகேசன், வீரகுமார் உள்ளிட்ட 14 பேர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. இதனை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
முன்னதாக, வால்பாறை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓவிய அறக்கட்டளை செயலாளர் விக்னேஷ் ராஜ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யை கவுரவித்து உரையாற்றினார்.