போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த குட்டி யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் வன விலங்குகள் இதன் உடலை உண்டுள்ளதால் இந்த யானை ஆண் யானையா அல்லது பெண் யானையா என சரியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வனச்சரகம் அருகே கேரள எல்லைப் பகுதியில் ஒரு யானை உயிரிழந்தது. அந்த யானை எவ்வாறு உயிரிழந்தது என தெரியாத நிலையில் தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது.
இந்த குட்டியானையின் உடல் பாகங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே யானை உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்த குட்டி யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் வன விலங்குகள் இதன் உடலை உண்டுள்ளதால் இந்த யானை ஆண் யானையா அல்லது பெண் யானையா என சரியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வனச்சரகம் அருகே கேரள எல்லைப் பகுதியில் ஒரு யானை உயிரிழந்தது. அந்த யானை எவ்வாறு உயிரிழந்தது என தெரியாத நிலையில் தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது.
இந்த குட்டியானையின் உடல் பாகங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே யானை உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.