மூளை சாவு அடைந்தவர் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

பொள்ளாச்சி தாலுகா, அங்களக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமியின் மனைவி வள்ளியம்மாள் (47). கடந்த 28 ஆம் தேதியன்று ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள அவரது மகன் கம்பெனியில் இருந்து அரவது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து சென்றுகொடிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதியன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் கிருஷ்ணசாமி மற்றும் மகன் மனோஜ்குமார் இணைந்து வள்ளியம்மாள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.

அவரது இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு கேஎம்சிஎச் மருத்துவமனையில் தேவைப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு சிறந்த முறையில் பொருத்தப்பட்டது. 

இதுகுறித்து கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய வள்ளியம்மாள் குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...