கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி

கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலை சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறைத்துறை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்குகளுக்கு ஏற்றவாறு 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவி மண்டல நன்னடத்தை அலுவலர் அறிக்கையின் படி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. நிதி உதவி பெருவோர் பட்டியலை வெளியிடுவார்.

அதன்படி, கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக துணை தலைவர் அறிவுடை நம்பி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி உதவி வழங்கும் விழாவில், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 46 பேரின் 30 வழக்குகளுக்கு ரூ.16 லட்சம் வழங்கப்பட்டது.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் நோக்கில் இந்த திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில், சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்டல நன்னடத்தை அலுவலர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...