இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக நீதி கேட்டு கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதி கேட்டு கோவையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சசி குமார் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை முக்கிய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்யவில்லை.

எனவே, சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் அதிமுக இரு அணிகளும் மோதிக்கொண்டு இருப்பதாகவும், அதனால் சட்ட ஒழுங்கு சீராக இல்லை எனவும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பரணியம் குற்றம்சாட்டினார். மேலும், தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ-க்கு சசிகுமார் கொலை வழக்கை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்து முன்னணியினரால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...