தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் வாட்ஸ்அப் எண் அறிமுகம்


கோவை மாநகராட்சியில் தென்மேற்கு பருவமழை வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள  ஐந்து மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட இடங்களை தவிர, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் உடனுக்குடன் அகற்றிவிடவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் - 8190000200 மற்றும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையம் எண் - 0422 2302323 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...