கோவை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவம் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யபிரியா (19). இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் தலை சுற்றல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சத்யபிரியா-வை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது இருதயத்தில் சிறிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



முதன் முறையாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள புதிய அறுவைசிகிச்சை இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. 25 நிமிடம் இருதய துடிப்பை நிறுத்தி மேற்கொள்ளும் இந்த சிகிச்சை மிகவும் நுணுக்கமானது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது 2 முதல் 3 லட்சம் வரை பணம் செலவாகும். எனவே, இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இனி பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...