ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய நோய்க்கு சிகிச்சை

ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வியர்த்துக் கொட்டியது. இருதயவலி ஆனால், இருதய அடைப்பாக தெரியவில்லை. அருகில் உள்ள  ஒரு மருத்துவமைனக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணிற்கு அங்கு (இசிஜி) எடுத்தபோது, பல வித்தியசமான மாற்றங்கள் இருந்தன. முதலுதவிக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், அவ்வப்போது மூச்சு திணறலும் ஏற்பட்டது.

பின்னர்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய நோய் பிரிவு ஆலோசகர் டாக்டர்  நந்தக்குமார் பரிசோதனை செய்தார். இருதயத்தின் பெருந்தமனியில் ஒரு வெடிப்பும், அதை சுற்றிலும் ரத்தம் சேர்ந்திருப்பதை கண்டுபிடித்தார். சிடி ஸ்கேன் செய்தபோது, பெருந்தமணியின் பல பகுதிகளிலும் இந்த வெடிப்பு காணப்பட்டது. இந்த சிறிய அளவிலான வெடிப்புகள் ரத்த நாளங்கள் வரை பரவியிருந்தது. பெருந்தமணியில் ஏற்பட்டிருந்த வெடிப்பால், குடல், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளுக்கு ரத்தம் சென்றிருந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையில் உதவி மருத்துவர்கள் டாக்டர் அருண், டாக்டர் சஜித், டாக்டர் மேனன் உள்ளிட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருதயத்தின் பெருந்தமணியில் ஏற்பட்ட வெடிப்பை சரி செய்து ரத்த கசிவை நிறுத்தினர். இதர உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வழி ஏற்படுத்தினர். இருதய ரத்த நாளத்தில் உள்ள கசிவையும் சரி செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய 6.30 மணி நேரம் ஆனது.

அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பாததால், மோசமாகலாம் என்றே கருதப்பட்டது. ஆனால், படிப்படியாக உடல்நிலை சீராகத் தொடங்கியது. 6 மணிநேரத்துக்குப்பின் மயக்க நிலையிலிருந்து மீண்டார். பின்னர் 10 நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால், குணமடைய முடிந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...