ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய நோய்க்கு சிகிச்சை

ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வியர்த்துக் கொட்டியது. இருதயவலி ஆனால், இருதய அடைப்பாக தெரியவில்லை. அருகில் உள்ள  ஒரு மருத்துவமைனக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணிற்கு அங்கு (இசிஜி) எடுத்தபோது, பல வித்தியசமான மாற்றங்கள் இருந்தன. முதலுதவிக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், அவ்வப்போது மூச்சு திணறலும் ஏற்பட்டது.

பின்னர்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய நோய் பிரிவு ஆலோசகர் டாக்டர்  நந்தக்குமார் பரிசோதனை செய்தார். இருதயத்தின் பெருந்தமனியில் ஒரு வெடிப்பும், அதை சுற்றிலும் ரத்தம் சேர்ந்திருப்பதை கண்டுபிடித்தார். சிடி ஸ்கேன் செய்தபோது, பெருந்தமணியின் பல பகுதிகளிலும் இந்த வெடிப்பு காணப்பட்டது. இந்த சிறிய அளவிலான வெடிப்புகள் ரத்த நாளங்கள் வரை பரவியிருந்தது. பெருந்தமணியில் ஏற்பட்டிருந்த வெடிப்பால், குடல், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளுக்கு ரத்தம் சென்றிருந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையில் உதவி மருத்துவர்கள் டாக்டர் அருண், டாக்டர் சஜித், டாக்டர் மேனன் உள்ளிட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருதயத்தின் பெருந்தமணியில் ஏற்பட்ட வெடிப்பை சரி செய்து ரத்த கசிவை நிறுத்தினர். இதர உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வழி ஏற்படுத்தினர். இருதய ரத்த நாளத்தில் உள்ள கசிவையும் சரி செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய 6.30 மணி நேரம் ஆனது.

அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பாததால், மோசமாகலாம் என்றே கருதப்பட்டது. ஆனால், படிப்படியாக உடல்நிலை சீராகத் தொடங்கியது. 6 மணிநேரத்துக்குப்பின் மயக்க நிலையிலிருந்து மீண்டார். பின்னர் 10 நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால், குணமடைய முடிந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...