கோவை ஒண்டிப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (63). இவரது மனைவி மகேஷ்வரி. லோகநாதனுக்கு கடந்த சில நாட்களாக கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மருந்துகளை சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த பினாயிலை, டானிக் என்று தவறுதலாக குடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது மனைவி அவரை மீட்டு பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கினை, சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்