பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் மோட்டார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஜானகி ராமன் (31), ரமேஷ் (21). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து 15 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் அங்கு இருந்த கணிணி உள்ளிட்டவற்றை திருட முயன்றனர். இதை பார்த்த அந்த நிறுவன மேளாலர் நாகராஜ், அவர்கள் இருவரையும் சக ஊழியர்களின் உதவுயுடன் பிடித்தார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து வழக்கு பரிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய பொருட்களை பரிமுதல் செய்தனர்.