நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை பூம்புகார் விற்பனை நிலையம் துவங்கி உள்ளது.
இக்கண்காட்சியினை கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன் துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைதிறத்தொழில்களில் வளர்ச்சிக்கழகம் சார்பில் 44 ம் ஆண்டுகாலமாக இந்த விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.

அடுத்த மாதம் அக்டோபர் 2 தேதி துவங்க உள்ள நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் என்ற பெயரில் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்நிறுவனம் துவங்கி உள்ளது. இக்கண்காட்சி (13.10.2016) வரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், மரபாச்சி பொம்மைகள், அஷ்டலஷ்மி, தசாவதாரம், ராமர் செட், கல்யாண செட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கிருஷ்ண லீலை செட், கோபியர் செட், உரியடி, உலகந்த பெருமாள், ஆழ்வார் செட்,ஆறுபடை வீடு, தக்ஷிணா மூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஒளவையர், பொங்கல் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சேரி செட், கீதோபதேசம், கொலு படிகள் மற்றும் பல்வேறு கொலு அமைக்க தேவையான பொருட்கள் இன்னும் ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.
இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக ராமாயண வரலாற்று கதையை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் மிக சிறப்பான முறையில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.50 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது என மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்தார்.
இக்கண்காட்சியினை கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன் துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைதிறத்தொழில்களில் வளர்ச்சிக்கழகம் சார்பில் 44 ம் ஆண்டுகாலமாக இந்த விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.

அடுத்த மாதம் அக்டோபர் 2 தேதி துவங்க உள்ள நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் என்ற பெயரில் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்நிறுவனம் துவங்கி உள்ளது. இக்கண்காட்சி (13.10.2016) வரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், மரபாச்சி பொம்மைகள், அஷ்டலஷ்மி, தசாவதாரம், ராமர் செட், கல்யாண செட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கிருஷ்ண லீலை செட், கோபியர் செட், உரியடி, உலகந்த பெருமாள், ஆழ்வார் செட்,ஆறுபடை வீடு, தக்ஷிணா மூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஒளவையர், பொங்கல் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சேரி செட், கீதோபதேசம், கொலு படிகள் மற்றும் பல்வேறு கொலு அமைக்க தேவையான பொருட்கள் இன்னும் ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.
இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக ராமாயண வரலாற்று கதையை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் மிக சிறப்பான முறையில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.50 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது என மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்தார்.