பாகிஸ்தான் திருப்பியடிக்கும் அபாயம். எல்லை கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்

சண்டிகர்: இந்திய விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், புகுந்து இந்தியா நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து எல்லை நெடுகிலும் ராணுவம் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. எதற்கும் தயார் என்ற நிலையில் ராணுவம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் அனைத்தும் தற்போது காலியாகி வருகிறது. அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளைக் காலிசெய்து விட்டு கூட்டம் கூட்டமாக வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தீவிரவாதிகள் புகுந்து தாக்கக் கூடும் என்பதால் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் எல்லைப் புற கிராமங்களில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...