ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்: மேலும் சில நாட்கள் மருத்துவமனையில்

உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா க்ரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலும் முதல்வர் நலம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு முதல்வரின் உடல்நலம் குறித்து செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில், மாநிலம் முழுவதும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவில் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வரின் உடல்நலம், நன்றாகத் தேறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...