இந்துதுஸ்தான் காலை அறிவியல் கல்லூரி, முதுகலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி உடையாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றது. இப்பேரணியை இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார்.

இந்துஸ்தான் சேவை அறக்கட்டளை அறங்காவலர் திருமதி சதிஷ் பிரியா வாழ்த்துறை வழங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்துரை தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ஷபானா டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இப்பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு பொடியை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், துறைத்தலைவர் திருமதி ராஜலட்சுமி, பேராசிரியர் முகம்மது ரபீக்கான், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


இந்துஸ்தான் சேவை அறக்கட்டளை அறங்காவலர் திருமதி சதிஷ் பிரியா வாழ்த்துறை வழங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்துரை தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ஷபானா டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இப்பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு பொடியை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், துறைத்தலைவர் திருமதி ராஜலட்சுமி, பேராசிரியர் முகம்மது ரபீக்கான், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
