காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம்

புதுடில்லி: கர்நாடகா - தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி, காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுவதற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பதற்காகவும் தேவைப்பட்டால் இருமாநில எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இரு மாநிலங்களுக்கு இடையே ஏதாவது மோதல் என தகவல் வந்தால், அமைதியை ஏற்படுத்த உண்ணா விரதம் இருப்பேன் என்றார். மேலும், இரு மாநிலங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இதனை இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்காக மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...