முதலமைச்சர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்- அப்பல்லோ நிர்வாகம்

முதல்வர் உடல்நிலை குறித்து இன்று காலை 8 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை மூத்த செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு உடல் நலம் பெற மே‌லும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதலமைச்சர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் ‌‌‌நட‌வடிக்கை எடுக்கப்படும் என்றும்‌ காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...