ஜெயலலிதா வழங்கப்படும் சிகிச்சை பற்றியோ அல்லது அவரது உடல் நிலை குறித்து இதுவரை ஏன் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கவில்லை. சுகாதார துறை அமைச்சரும் வாய் திறப்பதில்லை. வதந்திகளினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 1984ல் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து அன்றைய அமைச்சர் ஹண்டே தினம் அறிக்கை அளித்தார். தற்போது அது போல் எதுவும் இல்லை.
உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெரும் புகைப்படமாவது வெளியிட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டும் என்பது தான் தனது விருப்பம். வதந்திகளை உண்மை என நம்பி வேதனைபடும் அதிமுக தொண்டர்களின் நிலை கவலையளிக்கிறது. ஜெயலலிதா குணமாகும் வரை அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும்.
இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெரும் புகைப்படமாவது வெளியிட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டும் என்பது தான் தனது விருப்பம். வதந்திகளை உண்மை என நம்பி வேதனைபடும் அதிமுக தொண்டர்களின் நிலை கவலையளிக்கிறது. ஜெயலலிதா குணமாகும் வரை அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும்.
இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்