மக்கள் நலக் கூட்டணியினர் கோவை மாநகராட்சியில் போட்டியிடம் இடங்களுக்கான தொகுதி பங்கீட்டீல் உடன்பாடு எட்டப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ,கோவை மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணியினர் போட்டியிடும் இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து 7 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 30 இடங்களிலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி சார்பாக 32 இடங்களிலும் , மதிமுக சார்பாக 25இடங்களிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட ஒரு சில இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் , மற்று அனைத்து வேட்பாளர்களும் வருகின்ற 3 ஆம் தேதி போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ,கோவை மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணியினர் போட்டியிடும் இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து 7 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 30 இடங்களிலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி சார்பாக 32 இடங்களிலும் , மதிமுக சார்பாக 25இடங்களிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட ஒரு சில இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் , மற்று அனைத்து வேட்பாளர்களும் வருகின்ற 3 ஆம் தேதி போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.