கோவை : மக்கள் நலக் கூட்டணியினர் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர்

மக்கள் நலக் கூட்டணியினர் கோவை மாநகராட்சியில் போட்டியிடம் இடங்களுக்கான தொகுதி பங்கீட்டீல் உடன்பாடு எட்டப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ,கோவை மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணியினர் போட்டியிடும் இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து 7 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 30 இடங்களிலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி சார்பாக 32 இடங்களிலும் , மதிமுக சார்பாக 25இடங்களிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட ஒரு சில இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் , மற்று அனைத்து வேட்பாளர்களும் வருகின்ற 3 ஆம் தேதி போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...