வரும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று கொங்கு நாடு ஜன நாயக கட்சியின் மாநில தலைவர் G.Kநாகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை ப்ரஸ் க்ளப்பில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய நாகராஜ் " கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி பாஜக வுடன் கூட்டணி வைத்து , இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது. இதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கோவை மாநகரில் 35 மற்றும் 36 வது வார்டுகள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100க்கு. மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது" என்றார்..
கோவை ப்ரஸ் க்ளப்பில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய நாகராஜ் " கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி பாஜக வுடன் கூட்டணி வைத்து , இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது. இதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கோவை மாநகரில் 35 மற்றும் 36 வது வார்டுகள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100க்கு. மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது" என்றார்..