கோவையில் நடந்த வன்முறைக்கு காரணமான இந்து முன்னணி கட்சியை தடை செய்ய வேண்டும் என்று கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
சசிகுமார் கொலையை தொடர்ந்து கோவையில் இருக்கும் முஸ்லீம்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. சுமார் 5 கோடி அளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் முழுமையாக கைது செய்யவில்லை. இதற்கு காரணம் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஷ்வர சுப்ரமணி. அவர், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோவை குஜராத்தாக மாறும் என்றார். அவர் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, நேற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடந்தது. வன்முறைக்கு காரணமான இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.