இந்து முன்னணியை அமைப்பை தடை செய்யக்கோரி - இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்


கோவையில் நடந்த வன்முறைக்கு காரணமான இந்து முன்னணி கட்சியை தடை செய்ய வேண்டும் என்று கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. இஸ்லாமிய இயக்கங்களின்  தலைவர்கள் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது, அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 


சசிகுமார் கொலையை தொடர்ந்து கோவையில் இருக்கும் முஸ்லீம்களின்  நிறுவனங்கள் தாக்கப்பட்டன. சுமார் 5 கோடி அளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் முழுமையாக கைது செய்யவில்லை.  இதற்கு காரணம் அக்கட்சியின்  மாநில தலைவர் காடேஷ்வர சுப்ரமணி. அவர், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோவை குஜராத்தாக மாறும் என்றார். அவர் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, நேற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடந்தது. வன்முறைக்கு காரணமான இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...