சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவ�

கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22.9.2016 அன்று மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் கோவையில் காவல்துறையினர் பலரை சந்தேகத்தின் பேரில் கைது  செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 கோவையில் கடந்த 22ம் தேதி இந்து முன்னனி பிரமுகர் ச்சிகுமார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.அதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.இந்த சூழலில் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துடியலூர் பகுதியில் சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,வன்முறை சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டதில் சில விஷயங்கள் உள்ளே இருப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன் அவர்களை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்த பட்டியல் மற்றும் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டியது காவல்துறையினரின் கட்டாய கடமை எனவும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது எனவும் கூறினார். இதேபோல் சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும் எனவும் பொன் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக வன்முறை சம்பவம் தொடரபாக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு தர கோரி கண்ணீருடன் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...