கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோவை 100 வார்டுகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை கண்காணித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் போதுமான குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை உள்ளனவா என்பதையும், தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இடவசதிகள், செய்தியாளர்களுக்கான இடத்தையும் பார்வையிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யுமாறும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலருமான சசிப்பிரியா மாநகராட்சி பொறியாளர்கள் நாசர், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலருமான சசிப்பிரியா மாநகராட்சி பொறியாளர்கள் நாசர், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.