உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு, கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறி கோவை மாவட்ட அலுவலகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு திமுக சார்பில் சாந்தாமணி என்பவர் போட்டியிடுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என்றும், கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட வட்ட கழக செயலாளர் சசிகுமார் மனைவி ஸ்ரீபிரியாவுக்கு சீட்டு வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட திமுகவினர் வடகோவை அருகே உள்ள மாவட்ட அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வட்ட செயலாளர் முருகேசன் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் அதிமுக அமைச்சர் வேலுமணியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு 39வது வார்டுக்கு அறிமுகம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளரை போட்டியிட வைப்பதாக குற்றச்சாட்டினார். இதேபோல் 55வது வார்டுக்கும் கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வார்டு பிரதிநிதி எத்திராஜ் என்பவரும் புகார் தெரிவித்தார். இதற்கிடையே, மாவட்ட செயலாளர் நாச்சிமுத்துடன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற 39வது வார்டு செயலாளர் முருகேசன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு திமுக சார்பில் சாந்தாமணி என்பவர் போட்டியிடுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என்றும், கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட வட்ட கழக செயலாளர் சசிகுமார் மனைவி ஸ்ரீபிரியாவுக்கு சீட்டு வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட திமுகவினர் வடகோவை அருகே உள்ள மாவட்ட அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வட்ட செயலாளர் முருகேசன் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் அதிமுக அமைச்சர் வேலுமணியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு 39வது வார்டுக்கு அறிமுகம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளரை போட்டியிட வைப்பதாக குற்றச்சாட்டினார். இதேபோல் 55வது வார்டுக்கும் கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வார்டு பிரதிநிதி எத்திராஜ் என்பவரும் புகார் தெரிவித்தார். இதற்கிடையே, மாவட்ட செயலாளர் நாச்சிமுத்துடன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற 39வது வார்டு செயலாளர் முருகேசன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.