ஜெ. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்பல்லோ மருத்துவமனை


சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 11-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே மேற்பார்வையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு வரை பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இன்று தமிழக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று இரவு அப்பல்லோ நிர்வாகம், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



அதில் கூறப்படுள்ளதாவது

அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் Guy's and St. Thomas மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்வதேச சிறப்பு மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் இருந்து அப்பல்லோ மருத்துவமனை ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.

டாக்டர் ரிச்சர்ட் பீலே முதல்வரின் உடல்நிலையை ஆராய்ந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவரது மருத்துவ அறிக்கைகளையும் ரிச்சர்ட் பீலே ஆய்வு செய்தார்.

பின்னர் மருத்துவர்களுடன் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை குறித்து அவர் விவாதித்தார். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்தொற்றை குணப்படுத்த இப்போது ஆண்ட்டிபயாட்டிக்குகளுடன் கூடிய சிகிச்சை முறையை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...