மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமர் (25). இவர் அம்மாவட்ட 6 பெட்டாலியன் மதுரை பிரிவில் காவலராக பணியாற்றுகிறார். சசிகுமார் கொலையை தொடர்ந்து நடந்த வன்முறையை கட்டுப்படுத்த இவர்களது குழு கோவைக்கு வந்தது. சீர நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த அவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதை பார்த்த சக காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பணி உயர்வு கிடைக்காததால் மனம் உடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
பணி உயர்வு கிடைக்காததால் மனம் உடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.