வழி தவறிய புள்ளிமான் தெருநாய் கடித்து பலி

மோகனூர்: வழி தவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில், படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையோரம் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில் அருகில் வாழைத்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, புள்ளிமான் ஒன்று, வழி தவறி வந்தது. அதை பார்த்த, இரண்டு தெருநாய்கள் மானை துரத்தின. பயந்துபோன புள்ளிமான், கோவில் பின்புறம் உள்ள மயான சுற்றுச்சுவரை தாண்டி குதித்தது. அங்கு சுற்றி வளைத்த தெருநாய்கள் மானை கடித்து குதறின. அப்போது, ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள், தெருநாய்களை விரட்டி மானை மீட்டனர். இது குறித்து, மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரகர் கனகரத்தினம் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர்கள் அருள்குமார், மாதேஸ்வரன், அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மானை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...