வழி தவறிய புள்ளிமான் தெருநாய் கடித்து பலி

மோகனூர்: வழி தவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில், படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையோரம் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில் அருகில் வாழைத்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, புள்ளிமான் ஒன்று, வழி தவறி வந்தது. அதை பார்த்த, இரண்டு தெருநாய்கள் மானை துரத்தின. பயந்துபோன புள்ளிமான், கோவில் பின்புறம் உள்ள மயான சுற்றுச்சுவரை தாண்டி குதித்தது. அங்கு சுற்றி வளைத்த தெருநாய்கள் மானை கடித்து குதறின. அப்போது, ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள், தெருநாய்களை விரட்டி மானை மீட்டனர். இது குறித்து, மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரகர் கனகரத்தினம் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர்கள் அருள்குமார், மாதேஸ்வரன், அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மானை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...