தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

புதுக்கோட்டை: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில், தங்கமணி, பிரதீப், அருண், சண்முகவேல், கோபு என்ற 5 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று அவர்கள் கரை திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று டில்லி வர உள்ளதால், கைதான மீனவர்கள் 5 பேரும் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...