மேகி நூடுல்சை அழிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: தேக்கி வைக்கப்பட்ட, 550 டன் நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க, நெஸ்லே நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகளவு காரீயம்:

நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நுாடுல்சில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து வகை மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டது.

விற்பனைக்கு தடை:

பரிசோதனையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானதால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நெஸ்லே நிறுவன கிட்டங்கிகளில், 550 டன் மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அழிக்க உத்தரவு:

தற்போது, இந்த நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 38 ஆயிரம் டன் நுாடுல்ஸ் பாக்கெட்டு கள், சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்தி அழிக்கப்பட்டதாக, நெஸ்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...