புதுடில்லி: இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங், வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்து பஸ் மூலம் ஓட்டலுக்கு சென்றார்.சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்துள்ளார். இன்று அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சிங்கப்பூர் பிரதமருடன், அவரது மனைவி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் டில்லி வந்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் செல்லும் சிங்கப்பூர் பிரதமரை அம்மாநில முதல்வர் வசுந்தர ராஜே சந்தித்து மதிய விருந்து அளிக்க உள்ளார்.
உதய்ப்பூரில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார் சிங்கப்பூர் பிரதமர்.இந்நிலையில், நேற்று டில்லி வந்த அவரை மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த அவர் பஸ் மூலம், தான் தங்கவுள்ள ஓட்டலுக்கு சென்றடைந்தார்.
உதய்ப்பூரில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார் சிங்கப்பூர் பிரதமர்.இந்நிலையில், நேற்று டில்லி வந்த அவரை மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த அவர் பஸ் மூலம், தான் தங்கவுள்ள ஓட்டலுக்கு சென்றடைந்தார்.