வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த சிங்கப்பூர் பிரதமர்

புதுடில்லி: இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங், வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்து பஸ் மூலம் ஓட்டலுக்கு சென்றார்.சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்துள்ளார். இன்று அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சிங்கப்பூர் பிரதமருடன், அவரது மனைவி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் டில்லி வந்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் செல்லும் சிங்கப்பூர் பிரதமரை அம்மாநில முதல்வர் வசுந்தர ராஜே சந்தித்து மதிய விருந்து அளிக்க உள்ளார்.

உதய்ப்பூரில் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார் சிங்கப்பூர் பிரதமர்.இந்நிலையில், நேற்று டில்லி வந்த அவரை மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் வி.ஐ.பி., பாதுகாப்பை ஏற்க மறுத்த அவர் பஸ் மூலம், தான் தங்கவுள்ள ஓட்டலுக்கு சென்றடைந்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...