ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் காலை அறிவியல் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் மகுடபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளின் அணிவகுப்பினை ஏற்று மரியாதையை செய்தார். பின்னர், ஒலிம்பி  திபத்தினை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்:
இன்றைய காலத்தில் பெண்கள் உடல்நலம் பேணுதல் மிக அவசியமான ஒன்று. பெண்கள் இல்லத்திலும், பணியிடத்தில் பல்வேறு பணிகளை  ஆற்றுகின்றனர். அவர்கள் பிறர் துணையின்றி செயல்பட, உடல்நலம் பேணுதல் மிகவும் அவசியம் என்றார். 


ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதர்வர் சித்திரா பேசுகையில்: 
பெண்கள் வாழ்வில் உண்மை, விடாமுயற்சி, வலிமை, ஆளுமைத் தன்மை போன்ற பண்புகளை தக்க வைத்துக்கொண்டால், வெற்றியை நிலைநாட்ட முடியும் என்றார். 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மகேஸ்வரி அணைத்து விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். அனைத்து போட்டிகளிலும் சிறந்த விளையாட்டு அணியாக இண்டிகோ அணி வெற்றிவாகை சூடியது. அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை பட்டத்தினை இண்டிகோ அணியின் வீராங்கனை ஜனனி பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை நீலநிற அணியின் ஜெய ஸ்ரீ பெற்றுக் கொண்டார்.


இறுதியில் மாணவர் மன்றத் துணை செயலர் ஐஸ்வர்யா நன்றியுரை கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...