சசிகுமார் கொலை வழக்கு: திசை திருப்பும் சி.பி.சி.ஐ.டி !

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் காவல் துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆன்ந்த குமாரை இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல் துறையினர் அச்சுறுத்தல் காரணமாகவே ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கையை இருப்பதாகவும் இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தொடர்பாக விசாரிக்க சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கையும் இந்த பகுதிகளில் தலைதூக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் சசிகுமார் கொலை வழக்கினை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலிசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவதாக கூறி வருவதாகவும் அதே வேளையில் இந்த வழக்கினை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததை போல அவர்கள் திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த காடேஸ்வரா சுப்பிரமணியத்துடன் இந்து அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...