சசிகுமார் கொலை வழக்கு: திசை திருப்பும் சி.பி.சி.ஐ.டி !

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் காவல் துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆன்ந்த குமாரை இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல் துறையினர் அச்சுறுத்தல் காரணமாகவே ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கையை இருப்பதாகவும் இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தொடர்பாக விசாரிக்க சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கையும் இந்த பகுதிகளில் தலைதூக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் சசிகுமார் கொலை வழக்கினை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலிசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவதாக கூறி வருவதாகவும் அதே வேளையில் இந்த வழக்கினை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததை போல அவர்கள் திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த காடேஸ்வரா சுப்பிரமணியத்துடன் இந்து அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...