ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு கோவையில் மேலும் 11 பேரிடம் விசாரணை


கோவை உக்கடத்தில் ஐ.எஸ் .ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் NIA அமைப்பினர் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், உபைதுல் ரஹ்மான்,நபியுல்லா மற்றும் அபுதாகீர் ஆகிய 5 பேரிடம்  மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் 3 குழுக்களாக இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மேலும் மூவரை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் 8பேரின் பாஸ்போட் ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.கேரளாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த அபுபசீர் என்பவருடன் முகநூலில் இந்த இளைஞர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், முகநூலில் இவர்கள் இடையே நடந்த உரையாடல்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கோவை கமிஷ்னர் அலுவலகத்தை தவிர ரகசிய இடத்தில் வைத்து மேலும் மூன்று இளைஞகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோவையில் மட்டும் மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை நடந்த விசாரணையில் முக்கியதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...