புதுடெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலவாணி மாற்று விகிதத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி கடைசியாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்நிலையில், விநியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 14 காசுகள், டீசல் 10 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி கடைசியாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்நிலையில், விநியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 14 காசுகள், டீசல் 10 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.