காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு செப்டம்பர் 30-ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, மத்திய அரசின் வாதத்தை அடுத்து, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞரும் ஒப்புதல் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், மேலாண்மை வாரியம் அமைக்க தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

அடுத்த விசாரணை, அக்டோபர் 18-ம் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நடைபெறும் எனறும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் குழுவைக் கொண்டு இரு மாநிலங்களிலும் கள ஆய்வு நடத்தி, 17-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், 6-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக்கொண்ட நிலையில், 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தினசரி 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...